Jump to content

User:Suresh1330

From Wikipedia, the free encyclopedia

திருக்குறள், 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.


பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):

எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.).


ஜீவ சமாதி என்றால் என்ன அதை பற்றி திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்பதை சற்று பார்ப்போம்

இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்

ஆசை என்கின்ற மிக்க துன்பம் ஒருவருக்கு கெட்டுப் போகும்  என்றாள் அதாவது ஆசை இல்லை என்றால்   

இன்பம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்

இடைவிடாத இன்பம் என்றால்  ஒரு நொடி கூட அவர் துன்ப  படமாட்டார் என்பது கருத்து இதைத்தான் ஜீவ சமாதி என்று வட மொழியில் சொல்வர்

ஈண்டும் இன்பம் இடையறாது என்ற ஒரு கருத்தை நாம் உற்று பார்ப்போமேயானால் அவர் இந்தப் பிறப்பிலேயே உயிரோடு இருக்கும்போதே சொர்க்கத்தை காண்பார் என்பது பொருள்